ஒரே நாளில் பேரவை தேர்தல்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்திட தேர்தல் ஆணையம் கருதுவதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியூட்டுகிறது.  இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது நிலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒரே நாளில் நடத்தவும், எண்பது வயது மூத்த வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்கு முறையை ரத்து செய்தும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: