ஆவடி: கேக் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த வீராபுரம், சந்தோஷ்மாதா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (23). இவர், அதே பகுதி புதிய கண்ணியம்மன் நகர் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 28ந்தேதி பேக்கரி கடைக்கு 5 வாலிபர்கள் வந்தனர். பின்னர், அவர்கள் கடையில் கேக் வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்று விட்டனர். இதனை தட்டிக்கேட்ட சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதன்பிறகு, கடந்த 31ம்தேதி இரவு புத்தாண்டை ஒட்டி அவர்கள் அனைவரும் மீண்டும் கடைக்கு வந்தனர்.