சென்னையில் 4ம் தேதி முதல் 160 மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் வரும் 4ம்தேதி முதல் கூடுதலாக 160 மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  தெற்கு ரயில்வே ெசென்னை கோட்டம் ெவளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னையில் வரும் 4ம் தேதி முதல் மின்சார ரயில் சேவை 660ஆக அதிகரிக்க உள்ளது. அதன்படி கூடுதலாக 160 மின்சார ரயில் சேவைகள் 4ம்தேதி முதல் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 410 ரயில் சேவைகள் இயக்கப்படும்.  கடற்கரையில் இருந்து காலை முதல் ரயில் சேவை 3.55 மணிக்கும், கடைசி ரயில் சேவை இரவு 11.59 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து முதல் சேவை காலை 3.55 மணிக்கு, கடைசி ரயில் சேவை இரவு 11.59 மணிக்கும் இயக்கப்படுகிறது. இதேபோல் மூர்மார்க்கெட், வேளச்சேரி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் கடைசி ரயில் சேவை இரவு 10 மணி முதல் 12 மணி வரை இயக்கப்படுகிறது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Related Stories: