சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வுபெற்றார். இதனையடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி வினீத் கோத்தாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதனைதொடர்ந்து அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வழியனுப்பு விழா உரையாற்றினார். அதில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக, 2018ல் பொறுப்பேற்ற வினீத் கோத்தாரி இந்த இரண்டு ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் என பாராட்டு தெரிவித்தார்.