கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த கொங்கர்பாளையத்தில் 83 பயனாளிகளுக்கு அரசின் சார்பில் நேற்று இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் செங்கோட்டையன் வழங்குவதாகவும், ரூ.1.25 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், ஏற்கனவே வீட்டுமனை பெற்றவர்களுக்கே மீண்டும் வீட்டுமனை வழங்கப்படுவதாகவும், இதுவரை தங்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை எனவும் கூறி 100க்கும் மேற்பட்ட பெண்கள் நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி முன்பு நேற்று திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.