புதுடெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களைப்போற்றும் விதமாக, ‘சூரியன் உதித்து விட்டது’ என்ற புத்தாண்டு கவிதையை எழுதியுள்ளார் பிரதமர் மோடி. மத்திய அரசின் டிவிட்டர் பக்கம் வீடியோ செய்தியாக இக்கவிதையை வெளியிட்டுள்ளது. அதில், ‘புதிய ஆண்டின் முதல் நாளை நம் அன்புக்குரிய பிரதமரின் உற்சாகமூட்டும் கவிதையுடன் தொடங்குவோம்’ என்ற குறிப்புடன் வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில் ராணுவத்தினர், சுகாதாரத் துறையினர், விவசாயிகள், பெண்கள், பறக்கும் தேசியக் கொடி, பிரதமர் மோடி போன்ற காட்சிகள் ஒளிர்கின்றன.