தமிழகத்தில் ஜனவரி 5-ம் தேதி கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 5-ம் தேதி கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜனவரி 4-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories: