பிரிட்டனிலிருந்து மதுரை வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா.: உருமாறிய கொரோனா பாதிப்பா எனக் கண்டறிய நடவடிக்கை

மதுரை: பிரிட்டனிலிருந்து மதுரை வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அது உருமாறிய கொரோனா வைரஸா என்று தெரியவில்லை. கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவு வரை பிரிட்டனிலிருந்து 33,000 பேர் இந்தியா வந்துள்ளனர். இவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் பிரிட்டனிலிருந்து மதுரை திரும்பிய ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிதாக மேலும்  இருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தெரியவில்லை. இதனை உறுதி செய்யும் நடவடிக்கையை மதுரை சுகாதாரத்துறை எடுத்துள்ளது.

3 பேரின் சளி மாதிகளையும் புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: