சென்னை: பழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக மாநகர பேருந்துகளில் கல்லூரிகளுக்கு பயணிக்கலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்டிசி நிர்வாகம் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த கல்வியாண்டிற்கான புதிய இலவச பயண அட்டை அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.