கோலார்: சாதி, மதம், மொழி பேதமில்லாமல் அனைவரும் கூடி வாழும் சங்கமமாக கோலார் மாவட்டம் உள்ளது என முன்னாள் அமைச்சரும் கோலார் தொகுதி பேரவை உறுப்பினர் சீனிவாசகவுடா பெருமிதம் தெரிவித்தார். மாவட்டத்தின் நரசாபுராவில் கன்னட சேனா அமைப்பின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவ தினம் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று கன்னட கொடியை ஏற்றி வைத்து அவர் பேசும்போது, மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் மொழி பற்று இருக்க வேண்டும். நாம் தாயை ேநசிக்க யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேபோல் தாய்மொழியை நேசிக்கவும் யாரும் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.