மைசூரு: குருபர் சமூகத்தினருக்கான எஸ்.டி இடஒதுக்கீடு விஷயத்தில் பா.ஜ.வினர் மடாதிபதிகளின் கவனத்தை திசைத்திருப்பி வருகின்றனர் என்று எம்.எல்.ஏ. யதீந்திரா தெரிவித்தார். மைசூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குருபர் சமுகத்தினருக்கான எஸ்.டி.இடஒதுக்கீடு விஷயத்தில் மடாதிபதிகள் கவனத்தை திசைத்திருப்பி வருகின்றனர். இதனால், வேறு வழியில்லாமல் மக்களின் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். குருபர் சமூகத்தினருக்கு எஸ்.டி இடஒதுக்கீடு போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு உள்ளது என்பதை தெரிவிக்கவே எச்.எம். ரேவண்ணா கூட்டத்துக்கு சென்றார். அதே போல் எச்.எம். ரேவண்ணா உட்பட மடாதிபதிகள் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினர். சமூகத்தினரின் போராட்டம் என்பதால் அவரும் ஒப்புக்கொண்டார்.