சென்னை: தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக நிர்வாக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.