சென்னை: தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகுகிறது. சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன. 2019ல் புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவானது. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. மார்ச் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.