திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவில் அளிக்கப்பட்ட தளர்வின் காரணமாக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையிலும், கிரிவலத்துக்கான தடை மட்டும் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்நிலையில், மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 29ம்தேதி காலை 8.01 மணிக்கு தொடங்கி, 30ம் தேதி காலை 8.57 மணிக்கு நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.