அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் பிரிவை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு..!!

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவு பிரிவுகளை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் உத்தரவு பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை என மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி தங்கள் சின்னத்தை பிரபலப்படுத்த அரசு பணத்தை செலவிடுவது ஊழல் நடவடிக்கை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: