சாமந்தான்பேட்டை மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்!

நாகை: நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். விரைவில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆட்சியரின் உறுதி மொழியை ஏற்று நாளை முதல் கடலுக்கு செல்ல சாமந்தான்பேட்டை மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். 

Related Stories: