கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் எஸ்.சுஜாதா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. துணை பெருந்தலைவர் ஆர்.சரஸ்வதி ரமேஷ், ஒன்றிய ஆணையர் எம்.ராம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எஸ்.பிரெட்ரிக் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.ராணி, வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டி.யாமினி, பி.பூங்கோதை, மூ.நரேஷ்குமார், பா.யோகநாதன், நா.வெங்கடேசன், பா.தரணி, வி.கோவிந்தம்மாள், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், பா.சுபபிரியா, பா.சுமதி, மு.நீலாவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: