ஐதராபாத்: உடனடி லோன் ஆப் மூலம் வழங்கப்பட்ட கடனை வசூலிக்க வாடிக்கையாளர்களை அடாவடியாக மிரட்டியது தொடர்பாக சீனாவை சேர்ந்தவர் உட்பட 4 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.ஆன்லைனில் உடனடியாக கடன் வழங்க ஏராளமான மொபைல் ஆப்கள் வந்துவிட்டன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத ஆப்களில் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இதுபோன்ற ஒரு லோன் ஆப், வாடிக்கையாளர்களை மிரட்டுவதாக பல புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட ஆப்பின் கால் சென்டரில் விசாரணை நடத்தி, அங்கிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை நேற்று கைது செய்தனர்.