சென்னை: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்காக 19 தளங்கள் கொண்ட 190 குடியிருப்புகள் கட்ட ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு குடியிருப்புகளில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தாடண்டர் நகரில் பழைய டி பிரிவு குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்ததால், அந்த குடியிருப்புகளில் வசித்த ஊழியர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள சி பிரிவு குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர்.