திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் 9-வது இடம்: கொரோனா முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய சிறந்த 10 எம்.பி.க்கள் பட்டியல் வெளியீடு..!!!

டெல்லி: கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியன் இடம் பிடித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிரதமர்  நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதற்கிடையே, கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து டெல்லியைச் சேர்ந்த ஐ சிஸ்டம்ஸ் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆய்வு நடத்த தொடங்கியது. அந்தந்த தொகுதி மக்களின்  கருத்துகளின் அடிப்படையில் தற்போது, மக்களுக்கு சேவையாற்றிய முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலை கவர்ன் ஐ தனது www.governeye.co.in/survey/result வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், திமுக தென்சென்னை நாடாளுமன்ற  உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன் இடம் பிடித்துள்ளார்.

பட்டியலில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:

1. அனில் ஃபிரோஜியா (பாஜக)- மத்தியப் பிரதேசம்-உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதி.

2. அதலா பிரபாகர ரெட்டி (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி) – ஆந்திரப் பிரதேசம்- நெல்லூர் நாடாளுமன்ற தொகுதி.

3. ராகுல் காந்தி (காங்கிரஸ்)- கேரளா-வயநாடு நாடாளுமன்ற தொகுதி.

4. மஹுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்)- மேற்கு வங்கம் - கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதி.

5. எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பாஜக)- கர்நாடகா- பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதி.

6. ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவசேனா)- மகாராஷ்டிரா- நாசிக் நாடாளுமன்ற தொகுதி.

7. சுக்பீர் சிங் பாடல் (எஸ்ஏடி), பஞ்சாப்- ஃபெரோஸ்பூர் நாடாளுமன்ற தொகுதி.

8. சங்கர் லால்வானி (பாஜக)- மத்தியப் பிரதேசம்- இந்தூர் நாடாளுமன்ற தொகுதி.

9. டாக்டர் டி.சுமதி (எ) தமிசாச்சி தங்கபாண்டியன் (திமுக) – தமிழ்நாடு சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதி.   

10. நிதின் ஜெயராம் கட்கரி(பாஜக)- மகாராஷ்டிரா- நாக்பூர்  நாடாளுமன்ற தொகுதி.

Related Stories: