சென்னை: காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காளீஸ்வரி நிறுவனத்தின் டிரேட் மார்க் முத்திரையை போலியாக வரைந்து மற்ற நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹேமா புட்ஸ் நிறுவனம் நந்தி தீபம் ஆயில் என்ற பெயரில் விளக்கேற்றும் எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. தீபம் என்ற பெயர் எங்களின் காப்புரிமை. அதை ஹேமா புட்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு எண்ணெயை விற்பனை செய்ய பயன்படுத்தக் கூடாது. அதுமட்டுமல்லாமல் தீபம் ஆயில் பாட்டிலின் வடிவம், முத்திரை ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். எனவே, தீபம் ஆயில் என்ற பெயரை ஹேமா புட்ஸ் நிறுவனம் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.