பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி

ஐதராதாபாத்: பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். தற்போது நன்றாக இருக்கிறேன். நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும் என குறிப்பிட்டுளார்.

Related Stories: