சென்னை: ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க கருத்துகேட்பு தேவையில்லை என்ற உத்தரவு பற்றி பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 1ம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் துறை பதிலளிக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.