தந்தை பெரியார் 47வது நினைவு நாள் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

சென்னை: தந்தை பெரியாரின் 47வது நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார். இதுகுறித்து சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியாரின் 47வது நினைவு நாளான வருகிற 24ம் தேதி (வியாழன்) காலை 8.30 மணி அளவில் சென்னை, அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: