கார் ஷெட்டிற்குள் இருந்து அபயக்குரல் கொடுத்த நாய்: பூட்டை உடைத்து மீட்ட போலீசார்

நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு கார்கள் நிறுத்தப்படும் ஒரு ஷெட்டில் இருந்து நேற்று பகலில் நாய் ஒன்று ஊளையிட்டவாறு அபயகுரல் கொடுத்தது. பூட்டப்பட்டிருந்த அந்த ஷெட்டிற்குள் சிக்கிய நாய் தொடர்ந்து அபயக்குரல் கொடுத்தது. இதுகுறித்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணனுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அனுமதியுடன் அங்கு வந்த காவல்துறையினர் கார் ஷெட் கதவின் பூட்டை உடைத்து நாயை மீட்டனர்.

பின்னர் மாற்று பூட்டு போடப்பட்டது. உள்ளே நாய் இருந்தது தெரியாமல் கதவு பூட்டப்பட்டதாலும் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும் உள்ளே முடங்கிய நாய் கூக்குரலிட்டு அதன் பலனால் உதவிகிடைத்து தப்பியது.

Related Stories: