ராணிப்பேட்டை: அம்மூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை- சோளிங்கர் நெடுஞ்சாலையில் அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 251 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒரு தலைமையாசிரியர் உட்பட 8 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடந்தப்பட்டு வருகிறது. அவ்வாறு உள்ள கட்டிடங் கள் பழுதடைந்து அதில் உள்ள ஓடுகள் விழுந்து மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.