கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த கூத்தியம் பேட்டை கிராமத்தில் காமுடிகோயில் தெரு உள்ளது. இப்பகுதியில் குடிசை வீடுகள் அதிகளவில் உள்ளன. சில வாரங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, இப்பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. அந்த தண்ணீர் வடியாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பெய்த மழை நீரும், அதனுடன் சேர்ந்து கொண்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், கோயிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.