சென்னை போராட்டத்துக்கு வரும் திமுகவினரை தடுக்க பரனூர் சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் குவிப்பு

செங்கல்பட்டு, டிச. 19: சென்னை போராட்டத்துக்கு வரும் திமுகவினரை தடுக்க பரனூர் சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி, டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது. அதில் பங்கேற்க வருபவர்களை தடுக்கும் வகையில், பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் பங்கேற்பதற்காக செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், கடலூர், நாகை, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாயிகள் பங்கேற்கலாம் என தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் வகையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் எஸ்பி கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவ்வழியாக, வரும் சில வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தி, அனுப்பி வைத்தனர்.

Related Stories: