கண்ணம்மாபேட்டை மயானம் மூடல்

சென்னை: கண்ணம்மாபேட்டை  மயானத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் இன்று முதல் 3ம் தேதி வரை சைதாப்பேட்டை மற்றும் நெசப்பாக்கம்  மயானங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி  அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட கண்ணம்மாபேட்டை மயானபூமியில் மின்சார தகனமேடை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் ஜனவரி 3ம் தேதி வரை மூடப்படுகிறது. மேலும், பராமரிப்பு  பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில்  உள்ள சைதாப்பேட்டை மயானபூமி மற்றும் நெசப்பாக்கம் மயானபூமி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: