விசாரணைக்கு அழைத்து வந்தபோது பேருந்து முன் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

சென்னை: செம்மஞ்சேரி லால்பகதூர் சாஸ்திரி தெருவை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (33), எலக்ட்ரீஷியன். இவர், அதே பகுதியில் வசிக்கும் பானுமதியிடம் (45) நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டு, அவரது வீட்டு மீது கற்களை வீசியதாக  கூறப்படுகிறது. இதுபற்றி பானுமதி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் நேற்று இரவு 7.30 சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து, அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு,  அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுறது. அப்போது, சதீஷ்குமார் காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடிவந்து, அவ்வழியே சென்ற மாநகர பேருந்து முன் பாய்ந்தார். இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: