விவசாயிகளின் போராட்டத்தில் மோடி, அமித்ஷாவிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது: முத்தரசன் பேச்சு

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் ஜனநாயகத்தை மோடி, அமித்தாஷாவிடம் எதிர்பார்க்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.  டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டதில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: ஜனநாயகத்தின் மீது இந்த அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருக்குமேயானால் உடனடியாக இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ஆனால், மோடியின் ஆட்சி அப்படிப்பட்ட ஆட்சி  அல்ல. அது பாசிஸ்ட் கும்பல், மோடியும், அமித்ஷாவும் ஒரு பாசிஸ்ட். எனவே இவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: