சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து நாளை சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்!: முதல்வர் பழனிசாமி

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து நாளை சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்கள் குறைவாக உள்ளதால் நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். சேலம் பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வழிபட்ட பிறகு பிரச்சாரம் தொடங்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: