செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (36). தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த 2015 செப்டம்பரில், காளிதாஸ், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார், காளிதாசை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.