கோலார்: கர்நாடக சட்டமேலவையில் நடந்த மோதல் சம்பவம் தேசியளவில் அவமதிப்பு ஏற்படுத்தியுள்ளதால், மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக மஜத மேலவை உறுப்பினர் கோவிந்தராஜூ தெரிவித்தார். இது குறித்து கோலார் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, சட்ட மேலவை தலைவராக இருக்கும் பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக பாஜ கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்காக சிறப்பு மேலவை கூட்டம் கடந்த 15ம் தேதி கூட்டப்பட்டது. அவை கூடுதலாக மார்ஷல்கள் மணி அடித்தும் மேலவை தலைவர் அவைக்கு வராமல் இருந்தார். இதனால் துணைதலைவராக இருக்கும் தர்மேகவுடாவை இருக்கையில் அமர்த்தார்.