மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்தேன். குரூப் 1 பணியில் 181 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய முதல் நிலை தேர்வில் தேர்ச்சி ெபற்றேன். பிரதான எழுத்துத் தேர்வை முடித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இல்லை. தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்பட்டும், எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, கல்லூரிக்கு சென்று முழுநேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். மனுதாரர் ஆஜராகி, ‘‘தேர்வான 181 பேரில், 20 சதவீத தமிழ் வழி ஒதுக்கீட்டின்படி 34 பேர் தேர்வாகினர்.