தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் காலை 7 மணிக்குள் இடி, மின்னலுடன் கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் காலை 7 மணிக்குள் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யும். சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், கடலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 10 மாவட்டங்களில் 7 செ.மீ. அளவு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: