வழிப்பறி ஆசாமிகள் சிக்கினர்

புழல்: சோழவரம் ஏரி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தைல மர தோப்பில் கடந்த வாரம் சென்னையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் மது விருந்து நடத்தினர். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பிச்சென்றனர். புகாரின் பேரில் சோழவரம் போலீசார் ஹரி பிரசாத்(18), அருண்குமார்(18), தினேஷ்(18), ஆகாஷ்(18), யுவனேஸ்வரன்(18) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: