ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் முதன்முறையாக, ஒரு போலீஸ் ஸ்னிஃபர் நாய்க்கு இரண்டு காவல்துறையினருடன் இணைந்து மாதத்தின் சிறந்த காவலர் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ராய்கார் எஸ்.பி. சந்தோஷ் சிங், ரூபி என்ற நாயுடன் சேர்த்து இரண்டு காவல்துறையினருக்கு, மாதத்தின் சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் சட்டம் ஒழுங்கு பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொருவர் நாய் கையாளுபவர் வீரேந்திரா ஆவார். ரூபி என்ற நாய், சாரங்கர் ராயல் அரண்மனை கொள்ளை வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தடயங்களை கொடுத்து தீர்வு காண வழிவகுத்தது..