தேனி: தேனி நகர புது பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு பின்புறம் அரசுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நத்தம் புறம்போக்கு இடத்தில் ஐடி பார்க் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து இந்த இடத்தில் ஐடி பார்க் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என நேற்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வன அலுவலர் கவுதம், கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், முன்னாள் எம்பி சையதுகான், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரீத்தா உள்பட பலர் உடன் இருந்தனர்.