பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியது. மேலும், தமிழக எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சீரிப்பாய்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கிராம மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக ஆற்றை கடந்து சென்று வர வேண்டிய நிலையில் உள்ளனர்.