ஆற்றில் சிக்கியவர் பலி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியது. மேலும், தமிழக எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து உபரி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சீரிப்பாய்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கிராம மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக ஆற்றை கடந்து சென்று வர வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜ்குப்பம் அருந்ததியர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி நாதமுனி(32) என்ற வாலிபர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று வீட்டிற்கு செல்ல கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் இடையில் கடந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். ஆற்றில் நேற்று காலை அவரின் உடல் கரையில் ஒதுங்கியது. போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: