கட்டுமான அமைப்பு இல்லாமல் ஜி.பி.எஸ். பொருத்த நிர்பந்திப்பதா?: ஆட்டோ ஓட்டுனர்கள் போர்க்கொடி

சென்னை: கட்டுமான அமைப்பை உருவாக்காமல் ஜி.பி.எஸ். கருவியை பொருத்த வேண்டும் என நிர்பந்திப்பதா என ஆட்டோ ஓட்டுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். லாரி உரிமையாளர்களை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கட்டுமான அமைப்பு இல்லாமல் ஜி.பி.எஸ். பொருத்த நிர்பந்திப்பதாகாக ஆட்டோ ஓட்டுனர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். போக்குவரத்துத்துறையில் நிதி ஒதுக்கி ஜி.பி.எஸ். கருவி இலவசமாக பொருத்தப்படும் என அரசு தெரிவித்து இருந்தது. ஜி.பி.எஸ். கருவிகளை இலவசமாக பொருத்தித்தர அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆட்டோ ஓட்டுனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: