போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.!!

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 14 முதல் 2021 ஏப்ரல் 12 வரை 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் 2397 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து வலது, இடது பாசன வாய்க்காலிலும் நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 14 முதல் 2021 ஏப்ரல் 12 வரை 120 நாட்களுக்கு கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படும். கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் நீரால் 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: