சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 14ம் தேதி முதல் வனவிலங்கு கணக்கெடுப்பு துவக்கம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என 2 வனக்கோட்டங்களும் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், தலமலை, கடம்பூர், விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையானவன விலங்குகள் வசிக்கின்றன.

வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்த ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். மழைக்காலத்திற்கு முந்தைய கணக்கெடுப்பு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும், மழைக் காலத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மழைக்காலத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு வரும் 14ம் தேதி துவங்கி 19ம் தேதி  வரை நடைபெற உள்ளது. இதற்காக வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: