திருவனந்தபுரம்:தங்க கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி தன்னை சிறைக்கு வந்து சந்தித்த சிலர் கூறியதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொப்னா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னா, சரித்குமார் ஆகியோர் சுங்க இலாகாவின் காவலில் உள்ளனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை சொப்னா தெரிவித்து வருகிறார். கேரளாவில் உள்ள மிக முக்கிய அரசியல் பிரமுகரும் வெளிநாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டாலர்களை கடத்தினார் என்றும், அவருக்கு நானும் உதவி செய்துள்னேன் என்றும் சொப்னா சுங்க இலாகாவிடம் தெரிவித்தார்.