ம.பி. விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட் 200க்கு குத்தகை எடுத்த நிலத்தில் 60 லட்சம் வைரம்

போபால்: மத்திய பிரதேசத்தில் 200க்கு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயிக்கு கிடைத்த வைரமானது 60 லட்சத்துக்கு ஏலம்போனது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்த லகன் யாதவ்(45). இவர் கடந்த மாதம் நிலம் ஒன்றை மாதம் ₹200க்கு குத்தகைக்கு எடுத்தார். அந்த நிலத்தில் 10க்கு 10 என்ற அளவில் குழி தோண்டியிருக்கிறார். அதில் இருந்த மண்ணை அகற்ற முயன்றபோது கற்களும் சேர்ந்து வந்துள்ளது. அந்த கல் வித்தியாசமாக இருந்த நிலையில் சந்தேகமடைந்த லகன் அதனை அரசு அதிகாரியிடம் எடுத்து சென்று சோதனை செய்துள்ளார். அதில் அது 14.98 காரட் வைரக்கல் என்பது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து இந்த வைரக்கல்லை அவர் கடந்த சனியன்று ஏலம் விட்டார். வைரம் ₹60லட்சத்துக்கு ஏலம்போனது. இதனையடுத்து ஒரே இரவில் விவசாயி லகன் லட்சாதிபதியாகி உள்ளார்.

Related Stories: