திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிபர் புயல் மற்றும் புரெவி புயல் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.