தேவகோட்டை: தேவகோட்டையில் கோயில் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேவகோட்டை திண்ணன்செட்டியார் ஊருணி வடகரையில் கோட்டை அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் சுற்றுப்பகுதியில் பக்தர்கள் வசதிக்காக தற்போது பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால், இப்பணி நடந்து வரும் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.