சென்னை: முதல்வரிடம் வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரையில் இருந்து கார் மூலமாக சிவகங்கை சென்றார். அவரது வாகனம் மதுரை முக்கு இடத்திற்கு சென்றபோது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த மஸ்தான் பாதுஷா கோரிக்கை மனுவுடன் சாலையோரம் காத்திருந்தார். இதைக்கண்ட முதல்வர் தனது காரை நிறுத்தி மாற்றுத்திறனாளியிடம் கோரிக்கையை கேட்டார். ‘நான் 2 கால்களும் ஊனமுற்ற மாற்றுதிறனாளி. பி.பி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ படித்துள்ளேன். எனக்கு ஏதாவது ஒரு அரசு துறையில் பணி வழங்க வேண்டும்’ என அவர் கோரிக்கை வைத்தார்.