பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க படையெடுக்கும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன.  இவை காலை மற்றும் மாலை நேரங்களில் பவானிசாகர் அணையில்  தண்ணீர் குடிப்பதற்காக கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றன. நேற்று முன்தினம் மாலை

பவானிசாகர் அணையின் ஜீரோ பாயிண்ட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலையை கடந்த அணையின் நீர்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக சென்றன.

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் பகல் நேரங்களில் யானைகள் நடமாடுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: