காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாற்றில் குளித்த அக்கா, தங்கை உள்பட3 சிறுமிகள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். வடகிழக்குப் பருவமழை மற்றும் நிவர் புயலால் கடந்த வாரம் கனமழை பெய்தது. மேலும், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு திறந்ததால், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளமாக ஓடியது இந்நிலையில் காஞ்சிபுரம், தும்பவனம் விநாயகர் கோயில் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அரசு மருத்துவமனை ஊழியர். இவரது மகள்கள் ஜெய (16), சுபா (15), அதே பகுதியில் வசிக்கும் பூரணி (14).